Shift I +91 - 44 - 22351217 | Shift II +91 - 44 - 22351221
Accredited by NAAC with "B" Grade (Affiliated to University of Madras)

Tamil Department Activities

TAMIL DEPARTMENT ACTIVITIES

செல்லம்மாள் மகளிர் கல்லூரி (2024 -2025)
முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறை
மகாகவி பாரதியார் பிறந்தநாள் கருத்தரங்கம்
மற்றும்
தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய
பாரதிதாசனின் படைப்புலகம் போட்டிகளின் பரிசளிப்பு விழா

செல்லம்மாள் மகளிர் கல்லூரி, முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறையின் சார்பாக, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நிகழ்வாக, மகாகவி பாரதியார் பிறந்தநாள் ஒருநாள் கருத்தரங்கம் 11.12.2024 அன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கவிப்பேரருவி கலைமாமணி ஈரோடு தமிழன்பன் கலந்து கொண்டு, பாரதியாரைப் பற்றியும், பாரதிதாசன் உயிருடன் இருந்த காலத்தில், தான் அவருடன் பழகிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் அவரது உரை, கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
விழாவில் 09.12.2024 அன்று தமிழ் இலக்கிய மன்றம் பாரதிதாசனின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடத்திய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கருத்தரங்கின் சிறப்பாளர் கவிப்பேரருவி கலைமாமணி ஈரோடு தமிழன்பன் அவர்கள் கரங்களால் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

 

பாவேந்தர் பாரதிதாசன் கருத்தரங்கம்
சுயம் அறி சுற்றம் அறி சுயமரியாதை சூழ் உலகு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் சுயமரியாதைச் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறை “பாவேந்தர் பாரதிதாசன்” என்ற பொருண்மையில் ஒரு நாள் கருத்தரங்கத்தை 23.10.2024 புதன்கிழமை அன்று நடத்தியது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாரதிதாசன் இருக்கை தலைவர் பேராசிரியர் முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கருத்தரங்கிற்கு கல்லூரி ஆட்சி குழு உறுப்பினர் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர்.திருமதி.வீ. மகாலட்சுமி நட்சத்திரம் அவர்கள் தமிழ்த்துறை குறித்தும், கருத்தரங்கின் பொருண்மை குறித்தும் மற்றும் சிறப்பு விருந்தினரின் ஆளுமை குறித்தும் வாழ்த்துரை வழங்கினார். பாரதிதாசன் என்பவர் இயற்கையையும் எதார்த்த உணர்வுகளையும் நுண்மையாக ரசிக்கக்கூடிய சிறந்த ரசிகன். அத்தகைய ரசிகன் தமிழ் மொழியை கண்ணாடியா மாற்றி இரசனையை பிரதிபலிக்கக் கூடிய நல்ல கவிஞர். பாரதிதாசனின் கவி வரிகள் ஒவ்வொரு மாணவன் ஆழ்மனதில் பதியக்கூடியவை. அதன் அடிப்படையிலே கருத்தரங்கமானது அமைக்கப்பட்டுள்ளது என கருத்தரங்க நோக்கவுரையினை முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறைத்தலைவர் முனைவர்.திருமதி.ப. விமலா அவர்கள் வழங்கினார். தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் கி. புவனேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினரின் கல்வி செயல்பாடுகளையும் சமூகத் தொண்டுகளையும் புத்தக வெளியீட்டுகளையும் மாணவரிடையே எடுத்துக் கூறி அறிமுகம் செய்தார். பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் அவர்கள் ” சுயம் அறி சுற்றம் அறி, சுயமரியாதை சூழ் உலகு” என்ற தலைப்பில் மாணவரிடையே உரையாற்றினார். சுயமரியாதை குறித்து ஆழ்ந்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தினார். பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் இடையே உள்ள உறவு முறையையும், பாரதிதாசன் சுயமரியாதை இயக்க சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட திறத்தையும், அதை தனது கவிதைகளில் வெளிப்படுத்திய விதத்தையும் எடுத்துக்காட்டினார். சுயமரியாதை என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை உரிமை என்பதையும் எடுத்துரைத்தார். ஒவ்வொரு மனிதனும் பின்பற்றக்கூடிய பழக்கவழக்கங்களில் இருக்கக்கூடிய மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தலே திராவிடம். அதை பிரதிபலித்த பாரதிதாசன் கவிதைகளைச் சுட்டிக்காட்டி மாணவரிடையே நீண்ட நெடிய உரையாற்றினார். முனைவர் பட்ட ஆய்வு மாணவி செல்வி மு.நிஷா அவர்கள் நன்றியுரை வழங்கினார். தமிழ்த்துறையின் உதவி பேராசிரியர் செல்வி அ. வேளாங்கன்னி அமிர்தா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பெ.தே.சௌத்ரி அவர்கள் தொகுப்புரை வழங்கினார். இக்கருத்தரங்கில் 200க்கும் அதிகமான மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

மின்நூலகம் கல்விப் பிரிவு, ஆய்வு மற்றும் உருவாக்கம்” – கருத்தரங்கம்

01.10.2024

இன்றைய காலகட்டத்தில் ஒரு துறை சார்ந்தவர்களாக இருந்தால் சாதிப்பது என்பது அரிதாகிவிட்டது. முக்கியமாக மொழி சார்ந்து படிக்கக்கூடியவர்கள் தொழில்நுட்பத்தில் கைதேந்தவர்களாக இருக்கும்போது தான் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. எனவே தான் மொழியும் தொழில்நுட்பமும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. இத்தகைய பொருண்மையை மையப்படுத்தி 01.10.2024 அன்று செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறையும் (25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவின் பகுதியாக) மற்றும் தமிழ் இணையக் கல்வி கழகமும் இணைந்து “மின்நூலகம் கல்விப் பிரிவு, ஆய்வு மற்றும் உருவாக்கம்” என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கின் தொடக்கமாக முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறையின் துறைத்தலைவர் முனைவர்.திருமதி ப.விமலா அவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகம் குறித்த அறிமுகப்படுத்தோடு, வரவேற்புரை நல்கி தொடங்கினார்.
மொழி சார்ந்த படிக்கக்கூடிய மாணவர்கள் தொழில்நுட்பத்தின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இக்கருத்தரங்கை பயன்படுத்துங்கள் என்று கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி.வே.மலர்விழி அவர்கள் தலைமையுரையாற்றினார். அறிவின் களஞ்சியம் நூலகம். விரைவாக இயங்கும் இன்றைய காலத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த புத்தகத்தைப் படிப்பது என்பது மின்னூலகம் வழி சாத்தியமாகியுள்ளது. தமிழ் இணையக் கல்வி கழகத்தின் வழியாக இயங்கும் மின்னூலகத்தை எவ்வாறு அணுகலாம்? அம்மின்னூலகத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள், இதழ்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்கள் போன்றவை குறித்தும், மேலும் மின்னூலகத்தில் புத்தகங்களை பதிவிறக்கும் முறை, அவற்றை தேடுவதற்கான முறை போன்றவை குறித்து மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் தமிழ் இணைய கல்வி கழகத்தின் ஆய்வு வளமையர் திரு. இரா.செந்தில் குமரன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் இணைய கல்வி கழகத்தின் திட்ட இயக்குனர் முனைவர் திரு.அ.ஜேம்ஸ் அவர்கள் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழோடு கணித்தமிழும் இன்றைய சூழலில் அதிவேகமாக வளர்ந்து வருவதை பற்றியும், அத்தகைய கணித்தமிழில் ஒருங்குறி, தரவுகளை தொகுக்கும் முறை, மென்பொருள்கள், இலக்கண ஆய்வு, மற்றும் நிகழாய்வு போன்ற மென்பொருட்களை உருவாக்கும் முறை இதன் வழியாக வேலைவாய்ப்பினை உருவாக்குதல் போன்றவை குறித்து மாணவர்களிடையே விளக்கினார்.
தமிழ் இணைய கல்வி கழகத்தின் உதவி இயக்குனர் மற்றும் தேர்வு நெறியாளர் திருமதி.ஆர்.மதுரா அவர்கள் தமிழ் இணைய கல்விக்கழகம் கல்வியல் பிரிவில் எத்தகைய பணிகளை செய்து வருகிறது என்பது குறித்து விரிவாக பகிர்ந்தார். அயல்நாட்டில் உள்ள மாணவர்கள் தமிழ் கற்பித்தலும், அவர்களுக்கு தமிழ் கற்பிக்கக் கூடிய வேலை வாய்ப்புகளும், பண்ணிசை பயிற்சிகள், சான்றிதழ் கல்வி இதன் வழியாக ஏற்படும் வேலை வாய்ப்புகள் போன்றவை குறித்து மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறைப் பேராசிரியர்கள் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர். இக்கருத்தரங்கின் நிறைவாக முனைவர் பட்ட ஆய்வாளர் சௌத்ரி அவர்கள் நன்றியுரை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அ.வேளாங்கன்னி அமிர்தா இக்கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயன் பெற்றனர்.

செல்லம்மாள் மகளிர் கல்லூரி
தமிழ் இலக்கிய மன்றம் – கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்
2024-2025
தலைப்பு
‘பாரதிதாசனின் படைப்புலகம்’

வணக்கம் செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலை தமிழியல் மற்றும் உயராய்வு துறையின் தமிழ் இலக்கிய மன்றம், முதல்வர் மற்றும் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் பேரில் 2024-2025 கல்விஆண்டிற்கான நிகழ்வாக பாரதிதாசனின் படைப்புலகம் என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகளை, கல்லூரிகளுக்கு இடையே 09/12/2024 அன்று நடத்தியது. சுமார் இருபது கல்லூரிகளிலிருந்து, நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. ஒரு கல்லூரியிலிருந்து ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்த்துறை பேராசிரியர்கள் நடுவர்களாக சிறப்பாக செயலாற்றினர். பல்வேறு கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று, பரிசுகளைப் பெற்றனர். மாணவர்களின் அறிவு தூண்டலை ஏற்படுத்தும் விதமாக போட்டிகள் விளங்கின. பாரதிதாசன் குறித்த பரந்துபட்ட பார்வையினை, மாணவர்களிடையே இப்போட்டிகள் ஏற்படுத்தின என்றால் அது மிகையன்று.
பரிசுப் பெற்ற மாணவர்களுக்கு 11/122024 அன்று நடந்த பாரதியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கில் கவிப்பேரருவி கலைமாமணி ஈரோடு தமிழன்பன் அவர்களின் கரங்களினால் பரிசுகள் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணாக்கரின் பெயர்ப் பட்டியல்
கவிதைப் போட்டி
‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’

முதற்பரிசு – ஏ. நரேஷ், முதுகலைப் பொருளியல் முதலாமாண்டு, மாநிலக் கல்லூரி
இரண்டாம் பரிசு – க. சூரியா, வணிகவியல் முதலாமாண்டு, குருநானக் கல்லூரி
மூன்றாம் பரிசு – கு. அஸ்வினி, விலங்கியல் இரண்டாமாண்டு, செல்லம்மாள் மகளிர் கல்லூரி
ஊக்கப் பரிசு – வே. ஆனந்த், முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, பச்சையப்பன் கல்லூரி
கட்டுரைப் போட்டி
பாரதிதாசன் படைப்புகளில் புதுமை நோக்கும் புரட்சிப் போக்கும்’
முதற்பரிசு – மு. ரம்யா, இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி
இரண்டாம் பரிசு – த. ஜெசிந்தா, விலங்கியல் இரண்டாமாண்டு, குருநானக் கல்லூரி
மூன்றாம் பரிசு – சு. யுவஸ்ரீ, வேதியியல் மூன்றாமாண்டு, செல்லம்மாள் மகளிர் கல்லூரி
ஊக்கப் பரிசு – ஆ. தியோமின் ஆசிக்கா, B. Com (A&F) இரண்டாமாண்டு, மகளிர் கிறித்தவக் கல்லூரி
பேச்சுப் போட்டி
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ ’
முதற்பரிசு – க. ஸ்ரீசங்கமித்ரா, ஊட்டச்சத்துத் துறை, மகளிர் கிறித்தவக் கல்லூரி
இரண்டாம் பரிசு – அ. சாகுல் ஹமீது, முதுகலைத் தமிழ், புதுக்கல்லூரி
மூன்றாம் பரிசு – சீ. ஹரிக்ருபா, இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு, செல்லம்மாள் மகளிர் கல்லூரி
ஊக்கப் பரிசு – அ. அஜித், முதுகலைத் தமிழ், பச்சையப்பன் கல்லூரி
வினாடி வினா
முதற்பரிசு
1. மு. கிஷோர், முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
2. அ. வெங்கட்ராமன், முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு பச்சையப்பன் கல்லூரி
இரண்டாம் பரிசு
1. சு. அலிஷா கிரேஸ்லின், உளவியல் இரண்டாமாண்டு
2. ஜா. ஜெஸ்சானியா மிராக்குலின், ஊட்டச்சத்துத் துறை, இரண்டாமாண்டு மகளிர் கிறித்தவக் கல்லூரி

மூன்றாம் பரிசு
1. அ. ஜியோலின், முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
2. உ. மதிவதனி, ஊட்டச்சத்துத் துறை மூன்றாமாண்டு
எத்திராஜ் மகளிர் கல்லூரி
ஊக்கப் பரிசு
1. அ. சான்யா கௌசர், இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டு
2. வெ. சுரேகா, இளங்கலை வணிகவியல் மூன்றாமாண்டு
செல்லம்மாள் மகளிர் கல்லூரி

 

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின்

முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை

ஐந்து நாட்கள் இணைய வழி 

06.01.2025 முதல் 10.01.2025

ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

 
 
தமிழ் மொழியானது இலக்கியம் இலக்கணம் என்றில்லாமல் கணினி, அறிவியல் என தன் எல்லையை விரிவாக்கி வளர்ந்து வருகிறது. இவை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பிற துறை சார்ந்தவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு “அறிவியலும் தமிழும்” என்ற பாடத்திட்டத்தை  பொதுத்தமிழ் நான்காம் பருவத்திற்கு  பாடத்திட்ட குழு வகுத்துள்ளது. இப்பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும் நோக்கோடு  06.01.2025 முதல் 10.01.2025 வரையிலான ஐந்து நாட்கள் செல்லம்மாள் மகளிர் கல்லூரி, முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறை ஆசிரியர் திறன் மேம்பாட்டு  பயிற்சி நடத்தியது.

இப்பயிற்சியின் முதல் நாளான 06.01.2025 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சமூகவியல் கலை மற்றும் பண்பாட்டு புலம், இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பயிற்றுநராக கலந்து கொண்டார். இலக்கியங்களில் மேலாண்மை சிந்தனைகள் என்ற தலைப்பில் பயிற்சியை தொடர்ந்தார். மேலாண்மை என்பது ஒரு பொருளை அல்லது செயலை நிர்வாகம் செய்யக்கூடிய ஆற்றலை குறிக்கிறது. தொல்பழங்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான மனிதகுல வாழ்வியலையும் அதில் தமிழரின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகளோடு சிறப்பாக விளக்கினார். உலக நாகரிகத்தின் முன்னோடியாக தமிழர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு பல ஆதாரங்களை எடுத்துரைத்தார். தமிழர் வகுத்த நிலமும் பொழுதும், வேளாண்மை, உடை இருப்பிடம் போன்ற எல்லாவற்றிலும் மேலாண்மையை கடைப்பிடித்த விதத்தையும் இவற்றுள் அறிவியல் பொதிந்துள்ள திறத்தையும் பல இலக்கியச் சான்றுகளுடன் விளக்கினார்.
https://www.youtube.com/live/QgwFcES9_V0?si=95B-vSPXI5DDuYBb

இரண்டாம் நாள் (07/01/2025) நிகழ்வில் சென்னை கிருத்துவக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறை இணை பேராசிரியரும், குடிமைப்பணி மற்றும் அரசுத் தேர்வுகள் மைய மேனாள் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் திரு. ந. இளங்கோ அய்யா அவர்கள் “பணிவாய்ப்பும் தமிழும்” என்னும் தலைப்பில் தமிழ் கற்போருக்கான அரசுத்துறைப் பணி வாய்ப்புகள் அதற்கான தேர்வுகள், தேர்வுகளுக்குப் பயிற்சி பெறுவோர் படிக்க வேண்டிய புத்தகங்கள், நாளேடுகள், இதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள், இணையதளங்கள் குறித்தும் அவற்றை எவ்வாறு திட்டமிட்டுப் பயிலவேண்டும் என்ற முறையையும், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, போட்டித்தேர்வுகளுக்குப் பயன்படும் இணையதளங்கள், பயிற்சிக்கான திட்டமிடல் குறித்துச் சிறப்பாக விளக்கினார். மேலும், தேர்விற்குப் பயில்வோருக்கான அரசு உதவித்தொகை மற்றும் இலவசமாகப் பயிற்சிப் பெறும் முறைக் குறித்துப் பேராசிரியர்களுக்கு விளக்கி இத்தேர்வுகளில் பங்கு பெற மாணவர்களை ஊக்குவிக்கவும் வலியுறுத்தி தன்னுடைய உரையை மாணவர்களுக்கும், மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மிகப்பயனுள்ளதாக வழங்கினார்.
https://www.youtube.com/live/wM3n8sChMws?si=VjtmeZuwtUF3hgF4

 
மூன்றாம் நாள் இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி 08.01.2025 அன்று கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் தேர்வு நிலை உதவிப் பேராசிரியர், முனைவர் ச.குருஞானாம்பிகா அவர்கள் ‘பேச்சுக்கலைத் திறன்’ எனும் தலைப்பிலான தனது உரையைத் தொடங்கினார்.பேச்சுக்கலையின் வரலாற்றையும் வலிமையையும் எடுத்துரைத்து தனது உரையைத் தொடங்கிய பயிற்றுனர், பேச்சுத் திறனில் பேசும் கருத்துகள் மட்டுமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் நடை, உடல் மொழி, எடுத்துரைக்கும் நுட்பங்கள் போன்ற பிற முக்கியக் கூறுகளை விரிவாக விளக்கினார். மூத்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, அனைவருக்கும் எழுத்து மற்றும் பேச்சுக் கலையில் ஆர்வத்தைத் தூண்டினார்.சுவாமி விவேகானந்தர், பேரறிஞர் அண்ணா போன்ற மேடைப்பேச்சால் உலகத்தின் கவனத்தை ஈர்த்த மூத்த பேச்சாளர்களின் பேச்சாற்றல் திறனையும் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக் கூறி அன்றைய பயிற்சியில் இணைந்தோர் அனைவரும் பயன்பெரும் வகையில் உரையாற்றினார்.
 
 

 
நான்காம் நாளான 09.01.2025 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின் நூலக ஆய்வு வளமையரான திரு.இரா.செந்திகுமரன் அவர்கள் பயிற்றுநராகக் கலந்து கொண்டு மின்னூலாக்கம் என்ற தலைப்பில் சிறந்ததொரு உரையை வழங்கினார். நம் அறிவுச் சுரங்கமாய் இருக்கும் புத்தகங்களின் பொருண்மை மாறாமல், நவீன கால தொழில்நுட்பத்தோடு இணைந்து, பல தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்ல மின்னூலாக்கம் எவ்வளவு அவசியம், அதன் தேவைகள், ஒரு நூலை எப்படி, எந்தெந்த வழிமுறைகளிலெல்லாம் மின்னூலாக்கம் செய்யலாம் என்பதையெல்லாம் மிகவும் அழகாக எடுத்துரைத்தார். மேலும், அவற்றையெல்லாம் செய்முறை வடிவிலும் அவர் காண்பித்ததால் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது. இவையெல்லாம் முடிந்த பிறகு, தலைப்பையொட்டி யாருக்கேனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாய் கேட்கலாமென பொறுமையாய் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளித்து தன் சிறப்புரையை முடித்தார்.
 

ஐந்தாவது நாளான 10.01.2025 அன்று செயற்கை நுண்ணறிவு என்னும் பொருண்மையில் எம். ஜி .ஆர் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் திருமதி பா. ராதா ஜெயலட்சுமி அம்மையார் உரையாற்றினார். இவற்றில் AI என்றால் என்ன அவற்றின் வேலைகள் weak AI, Narrow AI, Strong AI போன்றவற்றின் விரிவாக்கத்தையும், மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளையும் தெளிவாக கூறினார்கள்.
ஐந்து நாட்கள் நடந்த இப்பயிற்சில் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் பயிற்சியில் பங்கேற்று பயனடைந்தனர்
https://www.youtube.com/live/di9IGrrqgDY?si=x_0FIAInWfvoIA7Vஐந்தாவது நாளான 10.01.2025 அன்று செயற்கை நுண்ணறிவு என்னும் பொருண்மையில் எம். ஜி .ஆர் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் திருமதி பா. ராதா ஜெயலட்சுமி அம்மையார் உரையாற்றினார். இவற்றில் AI என்றால் என்ன அவற்றின் வேலைகள் weak AI, Narrow AI, Strong AI போன்றவற்றின் விரிவாக்கத்தையும், மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளையும் தெளிவாக கூறினார்கள்.
ஐந்து நாட்கள் நடந்த இப்பயிற்சில் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் பயிற்சியில் பங்கேற்று பயனடைந்தனர்
https://www.youtube.com/live/di9IGrrqgDY?si=x_0FIAInWfvoIA7V

HOD                                                                         PRINCIPAL                                     

                              

பன்னாட்டு கருத்தரங்கம் 2024

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை சார்பாக மலேசிய சிறார் இலக்கியம் என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 12.01.24 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. மலேசியா சிறார் இலக்கிய எழுத்தாளர் பாலமுருகன் கேசவன் கலந்து கொண்டு சிறார் இலக்கியத்தின் சிறப்புகள், உத்திகள் மற்றும் சிறார் இலக்கியம் படைக்க வேண்டிய அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார். முதல்வர் முனைவர் வே.மலர்விழி அவர்கள் வாழ்த்துரையும், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ப.விமலா வரவேற்பரையாற்ற விழாவினை தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முனைவர் மா.ரமாதேவி முனைவர் இரா.விமலாதேவி இருவரும் ஒருங்கிணைத்தனர். இக்கருத்தரங்கில் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ்த்துறை மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பன்னாட்டு கருத்தரங்கம் 2023-24

முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறை சார்பாக 28/07/2023 அன்று ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இனிதே நடைப் பெற்றது. செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவி முனைவர். சந்திரிகா சுப்பிரமண்யன், (பாரிஸ்டர் ஆஸ்திரேலியா) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர். மகாலட்சுமி நட்சத்திரம் அவர்கள் தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்.ப.விமலா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.முன்னதாக முனைவர்.சா.வனிதா,(உதவிப்பேராசிரியர்)) அவர்கள் வரவேற்புரை நல்கினார்.முனைவர்.மோ.ரூபா,(உதவிப்பேராசிரியர்) அவர்கள் நிகழ்வின் இறுதியில் நன்றிரை வழங்கினார். இக்கருத்தரங்கில் முனைவர்.சந்திரிகா சுப்பிரண்யன் அவர்களுக்கு அவர்தம் கல்விசார் சமுதாயப் பணியை பாராட்டி மனிதநேயப் பண்பாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. முனைவர் பட்ட மாணவி செல்வி.வேளாண்கன்னி அமிர்தா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார். முனைவர் பட்ட மாணவி செல்வி. இந்துமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

 

 

https://youtu.be/-W0tOtmUDls

https://youtu.be/Yg8uMXvWh3U

https://youtu.be/QlUQyYhQc54

செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் உயராய்வுத்துறை தமிழ் மன்றம் அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டினை முன்னிட்டு திராவிடம் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் 31.01.2024 அன்று நிகழ்த்தியது நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கவிஞர் எழுத்தாளர் ஆதிரா முல்லை கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வே. மலர்விழி வாழ்த்துரை வழங்கினார. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. விமலா வரவேற்புரை நல்கினார். ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர்.தா அ சிரிஷா ,முனைவர் இரா. விமலா தேவி ஆகியோர் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். தமிழ் துறை மாணவிகள் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்வில் பேச்சு, கட்டுரை ,வினாடி வினா, கவிதை ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து கல்லூரிகளில் இருந்தும் பெருந்திரளான மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முத்தமிழ் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

*Tamil Literary Forum 2023*

*Vallalar 200*

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை, தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக “மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா” அதனை முன்னிட்டு 18.04.2022 அன்று பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அனைத்துக் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முத்தமிழ் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன

 

A two-day workshop jointly organized by the Tamil Department of Chellammal Women’s College and SRM Institute of Science & Technology was held on October 13 & 14. On 13.10.2022, the principal of the college attended and inaugurated the workshop by delivering a keynote speech. Associate Professor, SRM Institute of Science & Technology L. Sundaram trained the students effectively on various topics like use of Tamil in electronics, Tamil software classification and development, use of Tamil on the Internet, online learning and teaching of Tamil, use of computers for daily life and research. Prof. Kavita Nair, Head of Department of English and Foreign Languages, Institute of Science & Technology, attended and delivered the keynote address. At the end of the workshop, certificates were awarded to the students who participated in the training.

Seminar 2022-2023

National seminar was held on 19 January 2023. Dr.Vani arivalan, Assistant Professor of Tamil, University of Madras, was given speech about Pazhantamizhlar Kaadum kaadu Saarntha Vazhvum.

Chellammal Women’s College Alumni Dr. Chandrika subramaniyan ( Barrister Australia) Endowment Seminar was held on 26 February 2023.Dr.Balaraman,(Assistant Professorof Tamil, Govt Arts College ,Chennai )was given speech about “Tamizhar Vaalviyal”.

Youtube Link:

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை சார்பாக 07.01.2022 அன்று ஒருநாள் இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர். திரு சக்தி இராவணன் அவர்கள் பங்கேற்று “பழந்தமிழரின் இசைக்கருவிகள்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.

Chellammal Women’s College Alumni Dr.Chandrika subramaniyan( Barrister Australia) Endowment Seminar was held on 26 February 2023.Dr.Balaraman,(Assistant Professorof Tamil, Govt Arts College ,Chennai )was given speech about “Tamizhlar Vaalviyal’.

செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறையின் முன்னாள் மாணவி சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் தமிழ்த்துறைக்கு நன்கொடையாக வழங்கி அறக்கட்டளை நிறுவினார். அவ்வறக்கட்டளையின் தொடக்க விழா  07.03.2022 அன்று  இணைய வழியில் நடைபெற்றது. நிகழ்வில் அம்மா அவர்கள் அவருடைய கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, ஊக்க உரையும் ஆற்றி; விழாவினைச் சிறப்பித்தார்கள்.

 

 

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை சார்பாக 09.09.2021 அன்று தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா இணைய வழியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர். திருமதி ந.விஜயசுந்தரி அவர்கள் பங்கேற்று “இலக்கிய எரிபொருள்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முத்தமிழ் விழா 21.04.2022 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வர் பி.மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு “தமிழோடு உறவாடு” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  இந்நிகழ்வில் 18.04.2022 அன்று தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது.

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை சார்பாக 09.06.2021 மற்றும் 10.06.2021 ஆகிய இரு நாட்கள்  இணைய வழிக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் விழாவில் முனைவர் செல்லத்துரை சுதர்சன், சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம், முனைவர் திருமதி.உமாதேவி பேராசிரியர், தில்லி பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ஆறு அமர்வுகளில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளை வாசித்தார்கள். நிறைவு விழாவில் முனைவர் பா. இரவிக்குமார் உதவிப்பேராசிரியர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அவர்கள் பங்கு கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். முனைவர் சுரேஷ் ரத்தினசாமி சர்வதேசதமிழ் ஆய்விதழ், முதன்மை ஆசிரியர் அவர்கள் ஆய்வுரை வழங்க விழா  சிறப்பாக நிறைவுற்றது.